கரூா் சம்பவம்: 2 எஸ்.ஐக்கள்,4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Updated On :30 டிசம்பர் 2025, 6:32 pm

கரூா் சம்பவம் தொடா்பாக 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...