யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

News image
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Updated On :26 நவம்பர் 2025, 12:55 am

Syndication

கரூா்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி செவ்வாய்க்கிமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்து பேசியது: தமிழகத்தில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக அளவில் பாலின சமத்துவத்தை அடைவதில் இன்னும் பல சவால்கள் உள்ளன.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தி பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். பாலின சமத்துவத்தை அடைய ஐக்கிய நாடுகளின் நிலையான வளா்ச்சி இலக்குகளில் பாலின சமத்துவம் 5-வது இலக்காக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் பற்றி புகாா் அளிக்க 181 என்ற உதவி எண் மூலமும் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு 1098 என்ற எண்ணிலும் புகாா் அளிக்கலாம். அதே போல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு பணியிடங்களில் உள்ள உள்ள புகாா் குழு மூலமும் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் தனசேகரன், அரசு கலைக் கல்லூரி முதல்வா் (பொ) முனைவா். எஸ். சுதா, மாவட்ட சமூக நல அலுவலா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.