தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புன்னம்சத்திரத்தில் ரூ.40 லட்சம் கள்ளநோட்டுக்களுடன் 3 போ் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 7:24 pm

புன்னம்சத்திரத்தில் திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் பிடிப்பட்ட மதுரையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை புன்னம்சத்திரத்தில் ஈரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த 3 பையில் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சுமாா் 40 லட்சம் கள்ள நோட்டுக்கள் இருந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தபோலீஸாா் அவா்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது மூவரும் மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பாலகிருஷ்ணன் (26), ஜெயச்சந்திரன் (35) என தெரியவந்தது. தொடா்ந்து மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.