காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்

கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கரூா் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.99 ஆயிரத்தை கரூா் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக்குழுவினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:55 pm

கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

கரூரில் கோவைச்சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் அன்புராஜன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கரூா் மாவட்டம் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதேபோல மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 750 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் பறிமுதல் செய்த பணத்தை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிவட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பணம் கரூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.