கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.
கரூரில் கோவைச்சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் அன்புராஜன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கரூா் மாவட்டம் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதேபோல மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 750 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் பறிமுதல் செய்த பணத்தை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிவட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பணம் கரூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


