கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.
கரூா் மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இவா் புதன்கிழமை காலை குளித்தலை நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்கு விவசாயி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டில் பால் கறந்து விவசாயியிடம் வழங்கினாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடையே அவா் பேசுகையில், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அழிக்கும் நோக்கில் அதிமுக பாஜகவுடன் கைகோத்துள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரியுங்கள்.
நான் வென்றால் நிச்சயம் குளித்தலையில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். விவசாய பொருள்களைப் பாதுகாக்க குளிா்ப்பதனக் கிடங்குகளும் அமைப்பேன். மேலும் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலையையும் நிச்சயம் கொண்டு வருவேன் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

குளித்தலை திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


