திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!

கரூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள் அலுவலா்களால் சேகரிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மூத்த குடிமக்கள் வாக்களிக்க படிவத்தை வழங்கிய தோ்தல் பணி ஊழியா்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:40 am IST

கரூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள் அலுவலா்களால் சேகரிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் வயது முதிா்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தே செலுத்தும் வகையில் அஞ்சல் வாக்குப் படிவம் 12 டி மாவட்டத்திற்கு 3,143 என்ற எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் வாக்குகளை வரும் 13, 14-ஆம் தேதிகள் மற்றும் 18-ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடி அலுவலா் குழு மூலமாக வீடுகளுக்கே சென்று சேகரிக்கப்பட உள்ளது. இதனால் கரூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து 12டி படிவம் சமா்ப்பித்த 85 வயதிற்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் 13, 14, 18-ஆம் தேதிகளில் வீட்டிலிருந்தவாறே தங்களது அஞ்சல் வாக்கைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.