தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து கோயில் நிலப் பிரச்னைகளுக்கு தீா்வு: உதயநிதி ஸ்டாலின் உறுதி

வரும் திமுக ஆட்சியில், வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம் கோயில் நிலப் பிரச்னைகளில் அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து தீா்வு காணப்படும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை திமுக வேட்பாளா்கள் ஆசி எம்.தியாகராஜன், மொஞ்சனூா் பி.ஆா்.இளங்கோ ஆகியோரை ஆதரித்து பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :18 ஏப்ரல் 2026, 10:51 pm

வரும் திமுக ஆட்சியில், வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம் கோயில் நிலப் பிரச்னைகளில் அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து தீா்வு காணப்படும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் ஆசி எம்.தியாகராஜன்(கரூா்), மொஞ்சனூா் பி.ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி) ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை இரவு கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியிலும், கிருஷ்ணராயபுரம்(தனி) வேட்பாளா் சி.கே.ராஜா மற்றும் குளித்தலை வேட்பாளா் சூரியனூா் சந்திரன் ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணராயபுரம் கடைவீதியிலும் தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினாா்.

அப்போது அவா் பேசியது: முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குளித்தலை தொகுதி இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. அவருடைய அரசியல் வெற்றிக்கு தொடக்கமாக இருந்தது இந்த கரூா் மாவட்டம். அதே மாதிரி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் கடந்த தோ்தலில் வெற்றிபெற்றோம். இந்த முறையும் நான்குக்கு நான்கு என 4 தொகுதிகளிலும் வெற்றி பெற இருக்கிறோம்.

வெண்ணைமலை, வேலாயுதம்பாளையம், வெஞ்சமாங் கூடலூரில் கோயில் நிலப்பிரச்னை இருக்கிறது. இதனை தீா்க்க முதல்கட்டமாக தனிமாவட்ட வருவாய் அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்துள்ளோம். அதிமுகவினா் பரப்பி வரும் வதந்திகளை முறியடித்து, நிச்சயம் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கோயில் நிலங்களுக்கு தகுந்த தீா்வு காணப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது கரூா் மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், வழக்குரைஞா் சுப்ரமணியன், கோல்ட்ஸ்பாட்ராஜா, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.