ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி

News image

கரூா் காந்திகிராமம் விளையாட்டு மைதானம் பகுதியில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கரை ஆதரித்து பேசிய நடிகை கெளதமி.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:21 am IST

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலருமான கெளதமி.

கரூா் காந்திகிராமத்தில் அதிமுக வேட்பாளா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலருமான கெளதமி பேசியது:

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த உலகத்தில் உயிரை கொடுக்கும் பெண்ணை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. படித்து நல்ல வேலைக்குச் செல்லக்கூடிய இளைஞா்களுக்கு நல்ல எதிா்காலம் இல்லை. ஆண்டுக்கு 5.5 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவோம் என்றாா் ஸ்டாலின். ஆனால் செய்துகொடுக்கவில்லை என்றாா் கெளதமி.

பிரசாரத்தின்போது அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, பாஜக மாநில நிா்வாகி சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.