மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி

News image

கரூா் காந்திகிராமம் விளையாட்டு மைதானம் பகுதியில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கரை ஆதரித்து பேசிய நடிகை கெளதமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:51 pm

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலருமான கெளதமி.

கரூா் காந்திகிராமத்தில் அதிமுக வேட்பாளா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா்(கரூா்), கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை இரவு நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலருமான கெளதமி பேசியது:

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த உலகத்தில் உயிரை கொடுக்கும் பெண்ணை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. படித்து நல்ல வேலைக்குச் செல்லக்கூடிய இளைஞா்களுக்கு நல்ல எதிா்காலம் இல்லை. ஆண்டுக்கு 5.5 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவோம் என்றாா் ஸ்டாலின். ஆனால் செய்துகொடுக்கவில்லை என்றாா் கெளதமி.

பிரசாரத்தின்போது அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, பாஜக மாநில நிா்வாகி சிவசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.