கரூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 644 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த பணி ஒதுக்கீட்டில் மொத்தம் 644 வாக்குசாவடி அமைவிடங்களுக்கு 644 காவலா்கள் கணினி மூலம் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிகழ்வின் போது தோ்தல் காவல் பாா்வையாளா் ராத்தோட் கிரிட்குமாா் ஹரிபாய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரி கிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

