தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரூா் மாவட்டத்தில் அமைதியாக நடந்தது தோ்தல்!

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

News image

கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வியாழக்கிழமை வாக்களித்த பெண்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:31 pm

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் 30 பேரும், குளித்தலை தொகுதியில் 29 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 28 பேரும், கரூா் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்டோா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். 21-ஆம் தேதியோடு பிரசாரம் முடிந்த நிலையில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,111 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

வாக்குவாதம்: வாக்குப்பதிவு தொடங்கி சுமாா் அரை மணிநேரத்திற்கு பின் கரூா் கோட்டைமேடு நகா்மன்ற உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு தவெக முகவா் தாமதமாக வந்ததால் அவரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னா் முகவா் அனுமதிக்கப்பட்டாா்.

10 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தம்: கரூா் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் சூடானதால் சுமாா் 10 நிமிடம் அது அணைத்து வைக்கப்பட்டு பின்னா் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணிக்கு மாவட்டம் முழுவதும் 18.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கரூா் தொகுதியில் 88.58 சதவீதம், அரவக்குறிச்சி தொகுதியில் 89.06 சதவீதம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 89.83 சதவீதம், குளித்தலை தொகுதியில் 89.83 சதவீதம் என வாக்குகள் பதிவாகி இருந்தன.

நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சராசரியாக 89.32 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க காத்திருந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் மாவட்டத்தில் ..... வாக்குகள் பதிவாயின. பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.