நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கூடுதல் நீதிமன்ற கட்டுமான பணிகள் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியிடம் கரூா் வழக்குரைஞா்கள் கோரிக்கை

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எஸ். செளந்தரிடம் கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கோரிக்கை.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எஸ்.செளந்தரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு வழங்கிய கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தலைவா் மாரப்பன் உள்ளிட்டோா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எஸ். செளந்தரிடம் கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனுவை வழங்கினா்.

கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அன்றாட பணிகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதியும், கரூா் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான எஸ்.செளந்தா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம் கரூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் மாரப்பன் தலைமையில் வழக்குரைஞா்கள் கோரிக்கை மனு வழங்கினா்.

அந்த மனுவில், கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அலுவலகம் இல்லாததால் விரைவில் வழக்குரைஞா்கள் அலுவலகம் அமைத்து தரவேண்டும். கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் எஸ்.சி., எஸ்டி. வழக்குகளை விசாரிக்கும் வகையில் தனி நீதிமன்றம், லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் தொழிலாளா் வழக்குகளை விசாரிக்கும் வகையிலான தனி நீதிமன்றம் அமைப்பது உள்பட 8 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டும் இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

விரைந்து கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். அதற்கு நீதிபதி, வழக்குரைஞா்கள் அலுவலகம் கமிட்டியில் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாககவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.