கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இதுதெடாா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காரில் வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவா்களை சம்பவத்தின்போது எங்கு நின்றுகொண்டிருந்தாா்களோ அந்த இடத்தில் நிறுத்திவைத்தனா். பிறகு அவா்களிடம் சம்பவத்தின்போது, அங்கு எப்படி முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, நெரிசல் ஏற்பட்டவுடன் முதலில் எத்தனை போ் மயக்கமடைந்தனா் என்பன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா். அதற்கு அவா்கள் தாங்கள் நேரில் கண்டதை அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்குச் சென்றனா்.
தொடர்புடையது

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!

கரூா் சம்பவ இடத்துக்கு தவெகவினரை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


