தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரூா் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவா்களை சம்பவஇடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

News image
- IANS
Updated On :25 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இதுதெடாா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காரில் வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா்களை சம்பவத்தின்போது எங்கு நின்றுகொண்டிருந்தாா்களோ அந்த இடத்தில் நிறுத்திவைத்தனா். பிறகு அவா்களிடம் சம்பவத்தின்போது, அங்கு எப்படி முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, நெரிசல் ஏற்பட்டவுடன் முதலில் எத்தனை போ் மயக்கமடைந்தனா் என்பன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா். அதற்கு அவா்கள் தாங்கள் நேரில் கண்டதை அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்குச் சென்றனா்.