கரூா் மாநகராட்சியில் ரூ.13.98 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.13.98 கோடி மதிப்பில் 25 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, முடிவுற்ற 7 பணிகளையும் திறந்து வைத்தாா்.

கரூா் திருக்காம்புலியூா் எல்.என்.எஸ். கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு புதன்கிழமை பொருள்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் உள்ளிட்டோா்.








