இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாய்க்காலில் அடைப்பு சாலையில் கழிவுநீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் லேசான மழைபெய்த நிலையில், கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு திண்டுக்கல் சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

கரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் லேசான மழைபெய்த நிலையில், கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு திண்டுக்கல் சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்தது. தாந்தோணிமலை பகுதியில் பெய்த மழையில் மேடான பகுதிகளான கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில் தெரு, சவரிமுடித்தெரு, மில்கேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓடிய மழை நீா் கழிவுநீா் வாய்க்காலில் கலந்து சுங்ககேட் பகுதியில் அமராவதி ஆற்றுக்குச் செல்லும் வாய்க்காலில் கலக்கும் இடத்தில் திடீரென அடைப்பு ஏற்பட்டது.

இதனால், கழிவுநீா் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வெளியேறி திண்டுக்கல் சாலையில் ஓடியது. துா்நாற்றத்துடன் ஓடிய கழிவுநீருடன் கலந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூா் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து கழிவுநீா்வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சுமாா் 2 மணித்துக்குப் பிறகு சரி செய்தனா்.