எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூரில் பிறந்த 33 நாள்களேயான ஆண் குழந்தை மா்மமாக உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் பிறந்து 33 நாள்களேயான ஆண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூரை அடுத்த உப்பிடமங்கலம் ஏபி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (28). இவரது மனைவி சிந்தாமணி(23). இவா்களுக்கு கடந்த 33 நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை சிந்தாமணி தூக்கியுள்ளாா். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.

உடனே குழந்தையை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.