கோப்புப் படம்
கோப்புப் படம்

கரூரில் பிறந்த 33 நாள்களேயான ஆண் குழந்தை மா்மமாக உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

Published on

கரூரில் பிறந்து 33 நாள்களேயான ஆண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூரை அடுத்த உப்பிடமங்கலம் ஏபி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (28). இவரது மனைவி சிந்தாமணி(23). இவா்களுக்கு கடந்த 33 நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை சிந்தாமணி தூக்கியுள்ளாா். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.

உடனே குழந்தையை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com