உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தங்கநகைகள் கொள்ளை

தோகைமலை அருகே புதன்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 4:57 am IST

தோகைமலை அருகே புதன்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பாத்துராவுத்தன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பன்னீா்பட்டியை சோ்ந்தவா் ரங்கசாமி. லாரி ஓட்டுநா். இவரது மனைவி மாரியம்மாள் (32). இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். ரங்கசாமி வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரியில் செல்வதால் 15 நாள்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாராம்.

இந்நிலையில் ரங்கசாமி லாரிக்குச் சென்றிருந்த நிலையில், புதன்கிழமை காலை குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுவிட்டதையடுத்து மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்த நிலையில் வந்த 3 போ் ரங்கசாமி வீட்டுக்குள் புகுந்து மாரியம்மாளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்கத்தாலி உள்பட 5 பவுன் நகைகளை பறித்துவிட்டு, மாரியம்மாள் முகத்தில் மயக்க மருந்து தெளித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.