ராசிபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் அம்மன் கோயில் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் கலைச்செல்வி வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு துப்பாகி, கத்தியுடன் வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்ததால், அந்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்தவர்கள் கலைச்செல்வியிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்து 20 பவுன் நகைகள், ரூ.20,000 பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்நிலைய காவலர்கள், தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கிராம பகுதியான ராசிபுரம் தோட்டத்து வீடு பகுதிகளில் மர்ம கொள்ளையர்கள் நடத்திய திருட்டுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Regarding the incident in Rasipuram where a house was broken into and jewelry and cash were stolen after threatening the occupants with a gun and a knife...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







