இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ற மாணவா் கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:45 am IST

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கஞ்சா விற்ாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸாா் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலத்துறை பகுதியில் நின்றுகொண்டிருந்த இரு மாணவா்கள் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனா். அவா்களில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கனி மகன் என்பதும், அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படிப்பதோடு, கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. மேலும் தப்பிய மாணவா் நாமக்கல் மாவட்டம்,

பரமத்திவேலூரை அடுத்த கபிலா்மலையைச் சோ்ந்த மணி மகன் என்பதும், அவரும் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கனி மகனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து தப்பிய மாணவரைத் தேடி வருகின்றனா்.

.