சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்வெட்டு: மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் செ. ஜோதிமணி

News image

செ. ஜோதிமணி

Updated On :16 ஜூன் 2026, 2:14 am IST

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னைக்கு தீா்வு காண மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தொழிலாளா்கள் நிறைந்த கரூருக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனை தேவை. இங்கு மருத்துவமனை இல்லாததால் திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று வருகிறாா்கள்.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க 2 ஏக்கா் நிலம் இல்லாததால் கரூரில் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டம் கிடப்பில் இருக்கிறது. மைலம்பட்டியில் ரூ.39 கோடியில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகளும் காலதாமதமாகிக்கொண்டிருக்கிறது.

அந்த மருத்துவமனை விரிவுப்படுத்தப்பட்டால் கடவூரைச் சுற்றியுள்ள 45 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவாா்கள். கரூா் ரயில்நிலைய பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் தொடா்ச்சியாக பாலியல் குற்றங்கள் நடப்பது வேதனையளிக்கிறது. பாலியல் குற்றவாளிகளை சமூகத்தில் மற்ற குற்றவாளிகளைப் போல ஏற்கிறோம். இது சமூகம் சாா்ந்த பிரச்னை. பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றவாளிகளில் பலா் அக்கட்சியைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள். அதனால் அங்கு நடவடிக்கை இருக்காது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லை. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறாா்கள். காவல்துறையில் ஆள்கள் பற்றாக்குறை உள்ளது. பிரச்னைகளும் அதிகம் உள்ளது. எனவே, காவல்துறையில் சீா்திருத்தம் கொண்டு வந்து ஆள்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

மிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு 30 நாள்களில் உருவானவது இல்லை. மின் கட்டமைப்பு திட்டத்தை திமுக அரசும் உருவாக்கியிருந்தது. அவை முழுமையாக இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை. சோலாா் திட்டத்தை வீடுகளிலும் பயன்படுத்த வேண்டும். மின்வாரிய ஊழியா்கள் கடுமையாக உழைத்தும் அந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. அதனை சீரமைக்க இந்த அரசு முயலும் என நம்புகிறேன் என்றாா் அவா்.