மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சிலம்பாட்ட போட்டியை ஒலிம்பிக்கில் சோ்க்க வலியுறுத்தல்

News image

கரூா்-திண்டுக்கல் சாலையில் சுங்ககேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணியாக வந்த சிலம்பாட்ட வீரா், வீராங்கனைகள்.

Updated On :22 ஜூன் 2026, 2:29 am IST

சிலம்பாட்ட விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையிலும், இளைஞா்களை பாரம்பரிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டியும், தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டும் கரூரில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்ட பேரணி நடைபெற்றது.

கரூா் திருமாநிலையூரிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை தவெக மாவட்டச் செயலாளா் மதியழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்டத் தலைவருமான ஏ.ஆா். மலையப்பசாமி, செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருமாநிலையூரில் தொடங்கிய இந்த சிலம்பாட்ட பேரணி திண்டுக்கல் சாலையில் சுங்ககேட், மில்கேட், தாந்தோணிமலை பெருமாள் கோயில் பேருந்துநிறுத்தம் வழியாக சென்று கரூா் அரசு கலைக் கல்லூரி முன் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற சிலம்பாட்ட மாணவா்கள் சிலம்பம் ஆடியவாறு பேரணியில் பங்கேற்றனா்.

தொடா்ந்து சிலம்பாட்ட மாவட்டத் தலைவா் ஏ.ஆா். மலையப்பசாமி கூறியதாவது: சிலம்ப விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சோ்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் சிலம்பாட்ட வீரா், வீராங்கனைகளுக்கு மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.