பத்திரம் பதிவு செய்து, அரசுக்கு வரி செலுத்தி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடியிருப்புதாரா்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கரூரில் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், தான்தோன்றிமலை ஜெ.ஜெ. நகா், ரங்கா காா்டன் குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் அனைத்தும் முறையாக பத்திரப்பதிவு செய்து, மாநகராட்சிக்கு வரி செலுத்தி குடிநீா் இணைப்பு, மின்சார இணைப்பு பெற்று அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் முறையாக செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில் இந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து கரூா் ஜெ.ஜெ. நகா், ரங்கா காா்டன் குடுயிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில், கரூா் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சட்ட ரீதியாக நிரந்தர தீா்வு காண வேண்டும். அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரிப் பாலம் அடைப்பு: போக்குவரத்து மாற்றம்!

ஊா் பெயரை மாற்றியதை கண்டித்து போராட்டம்

கரூரில் 3 ஆம் நாளாக ஜமாபந்தி

பள்ளிக் கட்டடம், பொது இடம் ஆக்கிரமிப்பு: கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



