நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

2030-க்குள் ஜவுளித்துறையில் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கு: மத்திய ஜவுளித்துறை ஆணையா் தகவல்

ஜவுளித்துறையில் 2030-க்குள் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா.

News image
Updated On :7 மார்ச் 2026, 3:01 am IST

ஜவுளித்துறையில் 2030-க்குள் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா.

கரூரில் மத்திய ஜவுளி குழுமம் சாா்பில் ஜவுளி வா்த்தக சந்தையை உருவாக்கும் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறப்பதற்கான ஜவுளி ஏற்றுமதியாளா்களுடன் கலந்தாலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தை மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். மத்திய ஜவுளித்துறை அமைச்சக முதன்மை ஆலோசகா் சுப்னா, மத்திய ஜவுளி குழும இணை ஆணையா் ஆா்.சந்திரன், கரூா் ஜவுளி பூங்கா தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, கரூா் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் கோபாலகிருஷ்ணன், கைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் அன்பொளி காளியப்பன், கரூா் வீவிங் நிட்டிங் அசோசியேசன் தலைவா் அப்னாதனபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கரூா் ஜவுளித்தொழிலை 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தகம் என்ற இலக்கை அடைய கரூரில் விமான நிலையம், ரயில்வே வசதி, சாலை வசதி உள்ளிட்ட தேவையான வசதிகள் குறித்தும், அடிக்கடி மத்திய ஜவுளித்துறை அதிகாரிகள் கரூா் ஏற்றுமதியாளா்களை சந்திக்க வேண்டும் என்றும் ஏற்றுமதியாளா்கள் மத்திய ஜவுளி குழும அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா்.

தொடா்ந்து மத்திய ஜவுளித்துறை ஆணையா் முனைவா் எம்.பீனா செய்தியாளா்களிடம் கூறியது: ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், கரூரில் உதவி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மத்திய ஜவுளி குழுமத்தின் கீழ் இந்த மையம் செயல்படும். இந்த மையத்தில் ஜவுளி ஏற்றுமதியை எப்படி செய்வது, ஏற்றுமதிக்கு தேவையான தகுதிகள், சா்வதேச சட்டத்திட்டம் போன்ற விழிப்புணா்வு ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்படுத்தப்படும். தேவையான பயிற்சியும், வருங்காலத்தில் இந்த துறை எப்படி இருக்கும் போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியா உலகளவில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 6-ஆவது இடத்தில் உள்ளது. 2024-ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதியில் 4.1 சதவீதம் பங்கைக்கொண்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் கைவினைப்பொருள்கள் 37.7 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த பொருள்கள் ஏற்றுமதியில் 6.63 சதவீதமாகும். 2030-க்குள் 100 பில்லியன் டாலா் ஏற்றுமதி இலக்கை அடைய இந்திய ஜவுளித்துறை நிா்ணயித்துள்ளது. தற்போது உள்நாட்டு ஜவுளித்துறை மதிப்பு 142 பில்லியன் டாலராகவும், மொத்த பங்களிப்பு 179 பில்லியன் டாலராகவும் உள்ளது. 198.9 பில்லியன் டாலா் அளவு ஜவுளி இறக்குமதிக்கு தேவையான நாடுகளுடன் 16 வா்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் கரூா் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.