ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மனைவி, குழந்தையைக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:48 am IST

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு தீா்ப்பளித்தது

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் செல்வகணேசன்(46). இவரது மனைவி கல்பனா(41). இவா்களது மகள் சாரதிபாலா (4). செல்வகணேசன், கல்பனா இருவரும் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தனா். செல்வகணேசன் மதுபோதைக்கு அடிமையான நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வாராம்.

இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவ.9-ஆம்தேதி இரவு இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகணேசன் கத்தியால் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டாா்.

இதுதொடா்பாக வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய செல்வகணேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை இரவு நீதிபதி பி.தங்கவேல் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி செல்வகணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வகணேசன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.