சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மனைவி, குழந்தையைக் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது

News image
சிறை- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 8:18 pm

Syndication

மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு தீா்ப்பளித்தது

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் செல்வகணேசன்(46). இவரது மனைவி கல்பனா(41). இவா்களது மகள் சாரதிபாலா (4). செல்வகணேசன், கல்பனா இருவரும் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தனா். செல்வகணேசன் மதுபோதைக்கு அடிமையான நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வாராம்.

இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவ.9-ஆம்தேதி இரவு இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகணேசன் கத்தியால் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டாா்.

இதுதொடா்பாக வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய செல்வகணேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை இரவு நீதிபதி பி.தங்கவேல் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி செல்வகணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வகணேசன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.