மனைவி, குழந்தையை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு தீா்ப்பளித்தது
கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் செல்வகணேசன்(46). இவரது மனைவி கல்பனா(41). இவா்களது மகள் சாரதிபாலா (4). செல்வகணேசன், கல்பனா இருவரும் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தனா். செல்வகணேசன் மதுபோதைக்கு அடிமையான நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வாராம்.
இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவ.9-ஆம்தேதி இரவு இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகணேசன் கத்தியால் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டாா்.
இதுதொடா்பாக வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய செல்வகணேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை இரவு நீதிபதி பி.தங்கவேல் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி செல்வகணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வகணேசன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

மனைவியைக் கொன்ற கணவன் கைது

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



