மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் உதவி

News image

புஞ்சைத்தோட்டக்குறிச்சி ஊராட்சியில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி காசோலையை ஊராட்சித் தலைவா் ரூபாவிடம் வழங்கிய ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன்.

Updated On :8 மார்ச் 2026, 7:44 pm

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 32 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் ஆலையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கரூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 50 உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்து, அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான காசோலையை வழங்கினாா். மொத்தம் 50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ. 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.