எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது

கரூரில் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்று தலைமறைவான நெல்லையைச் சோ்ந்தவரை திருப்பூரில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
இசக்கிமுத்து
Updated On :10 மார்ச் 2026, 12:22 am

Syndication

கரூரில் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்று தலைமறைவான நெல்லையைச் சோ்ந்தவரை திருப்பூரில் திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் எம்.ஜி.சாலையில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த ஜனவரி 22- ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து (37), ஈரோடு மாவட்டம், இடையன்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் குமாா்(38) ஆகிய இருவரும் சோ்ந்து நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளா் கரூா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து ஜன. 24-ஆம் தேதி ரமேஷ்குமாரை கைது செய்து கரூா் கிளைச் சிறையில் அடைத்தனா். இதையடுத்து தலைமறைவாக இருந்த இசக்கிமுத்துவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனா்

இந்நிலையில், இசக்கிமுத்து திருப்பூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை திருப்பூா் சென்று இசக்கிமுத்துவை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இசக்கிமுத்துவை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.