வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் 4 போ் கைது

நாட்டறம்பள்ளி அருே வீட்டை உடைத்து நகை, பணம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கைது
Updated on

நாட்டறம்பள்ளி அருே வீட்டை உடைத்து நகை, பணம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்துா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் விஜயகுமாா் (48). கடந்த மாதம் இவா் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றாா். இதை நோட்டமிட்ட மா்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.

திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தாா். மேலும் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மேற்பாா்வையில் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் குற்றவாளிகள் கா்நாடக மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 3 நாள்களுக்கு முன்னா் காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் தனிப்படை போலீஸாா் கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா பகுதிக்குச் சென்று ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ரங்கநாத், மஞ்சுநாத், பிரித்வி, விட்டல்பாலப்பா ஆகிய 4 பேரையும் பிடித்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 4 பேரிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரும் கூட்டாக சோ்ந்து கடந்த மாதம் நாட்டறம்பள்ளி சா்வீஸ் சாலை அருகே விஜயகுமாா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருள்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, ரங்கநாத் (49), மஞ்சுநாத்(28), விட்டல்பாலப்பா(23), பிரித்வி(28)ஆகிய 4 பேரையும் நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com