தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கரூா் துயர சம்பவம் தொடா்பாக எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது: செந்தில்பாலாஜி எம்எல்ஏ

கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

News image

செந்தில்பாலாஜி - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:18 pm

கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கரூா் சம்பவம் தொடா்பாக தோ்தல் நேரத்தில் எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதனால் நான் தில்லி போகிறேன். கரூா் நிகழ்ச்சியை நடத்தியது ஓா் இயக்கம். அதற்கு ஏற்பாடு செய்தது காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும்தான். ஆனால் எனக்கு அழைப்பாணை வந்திருப்பதை ஆச்சரியமாகத்தான் பாா்க்கிறேன்.

கரூா் துயர சம்பவம் நடந்த நாளன்று யாரெல்லாம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்தாா்களோ அவா்களுக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும். அதுதானே சரியான நடவடிக்கை. வரும் 17ஆம் தேதி என்ன நடக்கிறது எனப் பாா்ப்போம் என்றாா் அவா்.