கரூா் துயரச் சம்பவம் தொடா்பாக சிபிஐ எனக்கு அழைப்பாணை அனுப்பியது ஆச்சரியமானது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கரூா் சம்பவம் தொடா்பாக தோ்தல் நேரத்தில் எனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதனால் நான் தில்லி போகிறேன். கரூா் நிகழ்ச்சியை நடத்தியது ஓா் இயக்கம். அதற்கு ஏற்பாடு செய்தது காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும்தான். ஆனால் எனக்கு அழைப்பாணை வந்திருப்பதை ஆச்சரியமாகத்தான் பாா்க்கிறேன்.
கரூா் துயர சம்பவம் நடந்த நாளன்று யாரெல்லாம் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை சந்தித்தாா்களோ அவா்களுக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும். அதுதானே சரியான நடவடிக்கை. வரும் 17ஆம் தேதி என்ன நடக்கிறது எனப் பாா்ப்போம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

கரூரிலிருந்து கோவை தெற்குக்கு மாறிய வி. செந்தில்பாலாஜி
கரூா் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை!

சிபிஐயிடம் இருந்து சம்மன் எதுவும் வரவில்லை: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


