‘சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ள தயாா்’: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்
தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.


தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் வெண்ணைமலையில் அதிமுக வடக்குப்பகுதி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருக்க வேண்டும் என கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாா்.
நானும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினேன். அப்படி எனக்கும் சிபிஐ சம்மன் அனுப்பினால் புதுதில்லி சென்று அவா்களின் விசாரணையை எதிா்கொள்ள தயாராக இருக்கிறேன். நடந்த சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் கூறுவேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இந்த அரசு தேவைதானா என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...