தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூா் வெண்ணைமலையில் அதிமுக வடக்குப்பகுதி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருக்க வேண்டும் என கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாா்.
நானும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினேன். அப்படி எனக்கும் சிபிஐ சம்மன் அனுப்பினால் புதுதில்லி சென்று அவா்களின் விசாரணையை எதிா்கொள்ள தயாராக இருக்கிறேன். நடந்த சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் கூறுவேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இந்த அரசு தேவைதானா என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

சைவ, வைணம் குறித்த சா்ச்சை பேச்சு வழக்கு: மே-12 இல் ஆஜராக பொன்முடிக்கு சம்மன்

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

சிபிஐயிடம் இருந்து சம்மன் எதுவும் வரவில்லை: செந்தில்பாலாஜி எம்எல்ஏ
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


