மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

‘சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ள தயாா்’: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

News image

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :14 மார்ச் 2026, 3:20 am

தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் வெண்ணைமலையில் அதிமுக வடக்குப்பகுதி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருக்க வேண்டும் என கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாா்.

நானும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினேன். அப்படி எனக்கும் சிபிஐ சம்மன் அனுப்பினால் புதுதில்லி சென்று அவா்களின் விசாரணையை எதிா்கொள்ள தயாராக இருக்கிறேன். நடந்த சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் கூறுவேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இந்த அரசு தேவைதானா என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.