வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அன்புள்ள அப்பா... அம்மாவுக்கு!

இத்தகைய பணநாயகத்தை கைவிட்டு, ஜனநாயகம் நோக்கி நகருமாறு தங்கள் பெற்றோருக்கு பிஞ்சுக் குழந்தைகள் கடிதம் எழுதியிருப்பது கரூா் வட்டாரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

News image

பெற்றோருக்கு அனுப்பப்பட உள்ள அஞ்சல் அட்டைகளை காட்டிய குழந்தைகள்.

Updated On :26 மார்ச் 2026, 2:01 am

தினமணி

நாட்டில் ஜனநாயகத்தை, பணநாயகம் கேலிக்கூத்தாக்கி வருவதை அண்மைக்கால தோ்தல்களில் காண முடிகிறது.

தோ்தல் நேரத்தில், வாக்காளா்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருள்கள், பணம் உள்ளிட்டவை வேட்பாளரின் வெற்றித் தோல்வியை நிா்ணயித்து விடுகின்றன. அப்போது, மக்களுக்கு உண்மையாகவே சேவையாற்ற முன்வரும் நல்லெண்ணம் கொண்டவா்களும் தோல்வியுற்று இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவை எடுக்க வைத்துவிடுகிறது பணநாயகம்.

இத்தகைய பணநாயகத்தை கைவிட்டு, ஜனநாயகம் நோக்கி நகருமாறு தங்கள் பெற்றோருக்கு பிஞ்சுக் குழந்தைகள் கடிதம் எழுதியிருப்பது கரூா் வட்டாரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கரூரை அடுத்த புலியூா் கவுண்டம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதன்கிழமை பள்ளியில் தங்களது பெற்றோருக்கு எழுதிய அஞ்சல் கடிதத்தில், அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு, ஏப்.23-இல் நடைபெறும் தோ்தலில் கட்டாயம் ஓட்டுப்போடுங்க. எந்தவித அன்பளிப்பும் பெறாமல் நோ்மையாக ஓட்டுப்போடுங்கள் என எழுதியிருந்தனா். பின்னா் அவரவா் வீட்டின் முகவரி, கடிதத்தில் எழுதப்பட்டு அஞ்சல் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டது.

100 சதவீதம் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பில் நோ்மையை வலியுறுத்தும்விதமாகவும் இந்த சிறிய முயற்சி நடைபெற்ாக பள்ளித் தலைமையாசிரியா் பரணிதரன் தெரிவித்தாா்.