கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என கட்டுமான தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் சிஐடியு மாவட்ட கட்டுமானத் தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ப. சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளா் ராஜீவ் காந்தி, துணைத் தலைவா் வி. கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
ஓய்வூதியம் பெறும் நலவாரிய கட்டுமான தொழிலாளா்கள் இறந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதலே வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.30,000 என உயா்த்தி வழங்க வேண்டும், மேலும் திருமண உதவித்தொகையையும் ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

