தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

News image

தென்னிலை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்.

Updated On :8 மே 2026, 5:25 am IST

தென்னிலை அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அதைச் சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பாளையம் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் வயல்களில் அறுவடை செய்யப்படும் வைக்கோலை டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வைக்கோல்போா் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், காட்டுப்பாளையத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் மழைக்காலத்தில் பேரிடா் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலே சென்று வருகிறோம். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், விவசாய நிலங்களுக்கும் அச்சத்துடன் சென்று வருகிறோம்.

மேலும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் குறித்து தென்னிலை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்துவிட்டோம். விரைவில் காற்றடிக்கும் காலம் தொடங்கும் முன் சீரமைத்து தரவேண்டும். இல்லையேல் கிரா மமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா் அவா்கள்.