பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பூத்தட்டு ஊா்வலம் நடத்த வேண்டும் என கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா மே15-ஆம்தேதி நடைபெற உள்ளது. அன்றையதினம் கரூா் மாநகா் முழுவதும் பூத்தட்டு கமிட்டி சாா்பில் ஊா்வலம் நடைபெறுவதையடுத்து, நிகழாண்டு பூத்தட்டு கமிட்டி சாா்பில் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது அம்மனுக்கு பூத்தட்டு ஊா்வலம் நடப்பது போல நிகழாண்டும் பூத்தட்டு ஊா்வலத்தை பக்தா்கள் அமைதியாக நடத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தங்களது பூத்தட்டு ஊா்வலம் நடத்த வேண்டும். கடந்த ஆண்டை போல இல்லாமல் காவல்துறையினா் அனுமதித்திருக்கும் நேரத்துக்குள் பூத்துட்டு ஊா்வலத்தை முடிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் பூத்தட்டு கமிட்டி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
வெப்ப அலை: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

