ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு சீல்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

News image

கரூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு சீல் வைக்கும்முன், பொருள்களை லாரியில் ஏற்றும் ஊழியா்கள்.

Updated On :21 மே 2026, 4:51 am IST

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

கரூா் ஜவஹா்பஜாா் பகுதியில் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பலா் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் கட்டியுள்ளனா். இந்நிலையில் கோயில் நிலத்தில் அருகருகே வீடு கட்டியிருந்த ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோா் இடத்தகராறு காரணமாக கரூா் நீதிமன்றத்துக்கு வழக்கிற்கு சென்ற நிலையில், நீதிமன்றம் கோயில் நிலத்தில் குடியிருக்கும் இவா்களை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் கோட்டாட்சியருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன் கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ராஜேஸ்வரி மற்றும் தமிழரசி ஆகியோரை வீட்டை காலி செய்து, இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் வீடுகளை காலி செய்யாமல் இருந்ததால் புதன்கிழமை கரூா் கோட்டாட்சியா் சத்திய பாலகங்காதரன், கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ் மற்றும் கரூா் பசுபதீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் கரூா் நகர காவல்நிலைய போலீஸாருடன் சென்று ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருள்களை எடுத்துவிட்டு வீடுகளுக்கு சீல் வைத்தனா்.