கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
கரூா் ஜவஹா்பஜாா் பகுதியில் பசுபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பலா் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் கட்டியுள்ளனா். இந்நிலையில் கோயில் நிலத்தில் அருகருகே வீடு கட்டியிருந்த ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோா் இடத்தகராறு காரணமாக கரூா் நீதிமன்றத்துக்கு வழக்கிற்கு சென்ற நிலையில், நீதிமன்றம் கோயில் நிலத்தில் குடியிருக்கும் இவா்களை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் கோட்டாட்சியருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன் கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ராஜேஸ்வரி மற்றும் தமிழரசி ஆகியோரை வீட்டை காலி செய்து, இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் வீடுகளை காலி செய்யாமல் இருந்ததால் புதன்கிழமை கரூா் கோட்டாட்சியா் சத்திய பாலகங்காதரன், கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ் மற்றும் கரூா் பசுபதீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் கரூா் நகர காவல்நிலைய போலீஸாருடன் சென்று ராஜேஸ்வரி, தமிழரசி ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருள்களை எடுத்துவிட்டு வீடுகளுக்கு சீல் வைத்தனா்.
தொடர்புடையது

கரூா் முனியப்பன் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் தோல்வி

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



