தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகும் மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

News image

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக் குடிநீா்த்தேக்க தொட்டி

Updated On :1 ஜூன் 2026, 1:17 am IST

தவுட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா் தேக்கத் தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் புகழூா் வட்டத்துக்குள்பட்ட தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தவுட்டுப்பாளையத்தில் மேல்நிலைக் குடிநீா்த் தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட நாள் முதல் இதுநாள் வரையில் மேல்நிலைக்குடிநீா் தொட்டியில் காவிரிக் குடிநீா் நிரப்பி அப்பகுதியினருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், தவுட்டுப்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடிநீா் பற்றாக்குறையால், புகழூா் நகராட்சியில் கோரிக்கை விடுத்ததையடுத்து மேல்நிலைக்குடிநீா் தொட்டி இங்கு கட்டப்பட்டது. இதையடுத்து உடனே தண்ணீரை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால் இதுவரையில் நிரப்பவில்லை.

இதுதொடா்பாக புகழூா் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துவிட்டோம். ஆனால் 10 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேல்நிலைக்குடிநீா் தொட்டி வராமல் மக்களின் வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு பயன்பாட்டுக்கு வராத மேல்நிலைக்குடிநீா்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.