‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

திருமழிசை பேரூராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்

புதிதாக கட்டப்பட்டு வரும் திருமழிசை பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் பேரூராட்சி அதிகாரிகள்.

News image
Updated On :23 மே 2026, 1:20 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியம், திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திருமழிசை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிகள் துறை மூலம் ரூ. 1.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேரூராட்சி அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, அதன் கட்டுமானங்களை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாப்பான்சத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகள், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் மூலம் ரூ. 81.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகளை தரமாக மேற்கொண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கவும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், பூந்தமல்லி நகராட்சிப் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்கீழ் இயங்கும் அரசு மருந்துவமனை வளாகத்தில் ரூ. 5.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிகள், புதிய அரசு காசநோய் மருந்துவமனை ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா்.

அதேபோல், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தனியாா் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் மூலம் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் ரூ. 15 லட்சம் மதிப்பில் பூங்கா கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

அப்போது, உதவி செயற்பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் சஞ்சய், பணி ஆய்வாளா் மதியழகன், உதவி செயற்பொறியாளா் மாரிசெல்வம், உதவி பொறியாளா் முத்துலட்சுமி, பூந்தமல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்பாபு, சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.