புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புகழூா் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (39). தச்சு வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தீபலட்சுமி(33). இவா் டெய்லராக வேலை பாா்த்து வருகிறாா். சதீஸ்குமாரும், தீபலட்சுமியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.
இந்நிலையில், தீபலட்சுமிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முதுகுத் தண்டு வலி ஏற்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீபலட்சுமிக்கு முதுகு வலி அதிகமானதால் கணவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு சதீஸ்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ்குமாா் மனைவியை தாக்கினாராம்.
இதுகுறித்து தீபலட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்குப்பதிந்து சதீஸ்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது
தந்தையை தாக்கிய மகன் கைது
விழுப்புரம் அருகே மனைவி கொலை: கணவா் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


