மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்

பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான வினோதா அறிவுறுத்தியுள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:55 am

DIN

பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான வினோதா அறிவுறுத்தியுள்ளார்.
  பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதி வினோதா மேலும் பேசியது:  
 சட்டம் குறித்து அனைத்துப் பிரிவு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.
இதில் சிவில், குடும்ப நல வழக்குகள், வங்கிக் கடன், குற்றவியல் வழக்குகள், ஜாமீனில் வெளியே வருதல், நீதிமன்றத்துக்கு செல்லாமல் சமரச தீர்வு காண்பது,
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலை கொடுக்கல்- வாங்கல் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனுவாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் அளித்து உரிய தீர்வு காணலாம். மேலும், வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு தொடுப்பவரோ சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள். எனவே, பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் என்றார்.  
 இந்நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் டி. வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.