ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி. 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:56 am

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி. 
ஆய்வில், வேப்பூர் வட்டாரம், பேரளி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கினார்.
தொடர்ந்து, சித்தளி கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நீடித்த நிலையான கரும்பு இயக்கத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக் கூடத்தையும், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கரும்பு பயிருக்கு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி கூறியது: 
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 35 குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் வீதம்  வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ், 2 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மானியத்தில் வேளாண் விளைபொருள்களின் மதிப்புக் கூட்டு இயந்திர மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2017- 18 ஆம் ஆண்டில் வேளாண் துறை மூலமாக ரூ. 852.10 லட்சம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.  
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2017- 18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் இயங்கும் 19 குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மானியத்தில் 17 டிராக்டர்கள், 6 பவர் டில்லர்கள்,  11 பவர் வீடர்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி முன்னிலையில் வேளாண்மை இயக்குநர் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், வேளாண்மை துணை இயக்குநர் சந்தானகிருஷ்னன் உள்பட வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.