தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் வருகை

பெரம்பலூருக்கு வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் மற்றும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:07 am IST

பெரம்பலூருக்கு வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் மற்றும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. 
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் 880 வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் காகித தணிக்கை இயந்திரம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பபட்டன. இந்த இயந்திரங்களை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே .சாந்தா உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. பாதுகாப்பாக்க வைக்கப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம், காகித தணிக்கை இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சி. சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் நா. விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வட்டாட்சியர் பாரதிவளவன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டு  சீல் வைக்கப்பட்டது. இந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.