எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

மின் ஊழியர்கள் சங்கப் பேரவைக் கூட்டம்

பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்

Updated On :25 டிசம்பர் 2018, 9:37 am IST

பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்கள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, வட்ட கன்வீனர் எஸ். காசிநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சி. ராஜகுமாரி, எம். பிச்சைபிள்ளை, சேகர், கோபால், வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயலர் எஸ். தனலட்சுமி, மாநில துணைத் தலைவர் எஸ். அகஸ்டின், சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில், மின் வாரியத்தில் வருவாய் ஈட்டித்தரும் பிரிவான கணக்கீட்டுப் பிரிவுக்கு கணினி, பிரிண்டர், காகிதம் உள்ளிட்ட தரமான உபகரணங்களை வழங்க வேண்டும். மின் கணக்கீட்டாளர்களுக்கு ரெயின் கோட் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் ஊழியர்கள் நலன் கருதி விசாக கமிட்டி அமைக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதா 2018- ஐ திரும்ப பெற வலியுறுத்தி, 2019 ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.