இளைஞர் சாவில் சந்தேகம்:தாயின் புகாரில் விசாரணை
பெரம்பலூர் அருகே இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.


பெரம்பலூர் அருகே இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினக்குமார் (27), பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்.
இவரது மனைவி அனிதா (23). தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் அனிதா சின்னாறு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், சின்னாறு சென்று மனைவியை பார்த்துவிட்டு சிறுவாச்சூர் வந்த ரத்தினக்குமார் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, சின்னாறு சென்றபோது தனது மகனை அடித்து, அவமானப்படுத்தியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ரத்தினக்குமாரின் தாய் மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...