சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மனுநீதி நிறைவு நாள் முகாமில் உதவிகள்

கூத்தனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ. 55.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அளித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.  

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:48 am

DIN

கூத்தனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 99 பயனாளிகளுக்கு, ரூ. 55.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அளித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.  
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கூத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது: 
தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. கிராமப்புற மக்களின் குறைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். முகாமில், 62 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 43 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் மீது  உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர். 
தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 99 பயனாளிகளுக்கு ரூ. 55,07,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி. 
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், வட்டாட்சியர்கள் ந. சீனிவாசன், ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.