பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து,வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 21ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்திருந்தனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் 53 செயலர்கள் உள்பட 165 பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் 53 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் பூட்டிப்பட்டிருந்தன. இதனால், வங்கிப் பணிகள், பொதுமக்களுக்கான வங்கிச்சேவை பாதிக்கப்பட்டது. இந்த விடுப்பு போராட்டம் மே 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

