அரசுப் பேருந்தில் பயணம் செய்ய இலவச பயண பேருந்து அட்டை வழங்க விருது பெற்ற நல்லாசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூரில் அகில இந்திய விருது பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சையத்பாஷாகான், துணைத் தலைவர் சிவராமன், செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, புலவர் கோவிந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கடந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு ஒரு ஆசிரியருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டைப்போல, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும். விருது பெற்ற நல்லாசிரியர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

