அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
அரியலூரில் ஜன.25 ஆம் தேதி நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற பணியாற்றுவது, இரண்டாவது கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ரெங்கசாமி, அமைப்புச் செயலர்கள் ஆர். மனோகரன், சாருபாலா ஆர்.தொண்டைமான், பண்ணைவயல் சு.பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலர்கள் சேகர், செ. வீரமுத்து, நாகராஜன், வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைச் செயலர் குலோத்துங்கன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் கலைவாணன், மாவட்ட மகளிரணிச் செயலர் பூங்கோதை, இணைச் செயலர்கள் மைதிலி, கெளரி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட மாணவரணியைச் சேர்ந்த ஜீவானந்தம் வரவேற்றார். நிறைவில், நகரச் செயலர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


