பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்  இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 7:23 am IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்  இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
அரியலூரில் ஜன.25 ஆம் தேதி நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற பணியாற்றுவது, இரண்டாவது கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ரெங்கசாமி, அமைப்புச் செயலர்கள் ஆர். மனோகரன், சாருபாலா ஆர்.தொண்டைமான், பண்ணைவயல் சு.பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலர்கள் சேகர், செ. வீரமுத்து, நாகராஜன், வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைச் செயலர் குலோத்துங்கன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் கலைவாணன், மாவட்ட மகளிரணிச் செயலர் பூங்கோதை, இணைச் செயலர்கள் மைதிலி, கெளரி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட மாணவரணியைச் சேர்ந்த ஜீவானந்தம் வரவேற்றார். நிறைவில்,  நகரச் செயலர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.