தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்டஈடுகோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்

Updated On :23 ஜனவரி 2019, 7:26 am IST

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மானாவாரியாக சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ. 7,410  மும், இறவை சாகுபடிக்கு ரூ. 13,500- மும் நஷ்ட ஈடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது போதுமானதல்ல.
 உற்பத்தி செலவின் அடிப்படையில், நஷ்ட ஈடுத்தொகையை ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பெற்ற விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய விதைக் கழகம் மூலம் தரமான விதைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலுர் புறநகர்ப் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்டத் துணை நிர்வாகிகள் விநாயகம், கோவிந்தன்  முன்னிலை வகித்தனர். 
சங்கத்தின் மாநிலச் செயலர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. கலையரசி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மாவட்டத் துணை நிர்வாகிகள் பொன்னுசாமி, மணி, கண்ணன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.                                                   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.