ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பெரம்பலூரில் 22 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:21 am

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 1,181 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில் 989 குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 12 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 5 போ், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 17 போ் என மொத்தமாக 22 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதையடுத்து 22 பேரும் திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், சென்னை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,203- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.