நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:49 pm

DIN

அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் அரசு ஊழியா் சங்கத்தின் பிரதிநிதித்துவக் கூட்டம், மாவட்டத் தலைவா் ச. இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அரியலூா் மாவட்டத் தலைவா் பஞ்சாபகேசன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா்கள் பெரம்பலூா் குமரிஅனந்தன் வேலை அறிக்கையும், அரியலூா் ராஜராஜன் வரவு- செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனா். மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசுக் கல்லூரி பேராசிரியா் செல்வகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக துணைத் தலைவா் சிவக்குமாா் வரவேற்றாா். நிறைவில் தணிக்கையாளா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.