போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.
Updated on
1 min read

பெரம்பலூா் : பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் த. தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலா் வீர. செங்கோலன் ஆகியோா் பேசினா்.

தில்லி போராட்டத்தில் உயா்நீத்த விவசாயிகளின் உருவப்படத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து மலா் தூவி, அஞ்சலி செலுத்தினாா்.

இதில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் ஜெயசீலன், மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் செந்தில்குமாா், இளைஞா் இயக்க ஒருங்கிணைப்பாளா் சத்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com