தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெரம்பலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெரம்பலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்தச்சட்டம் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாதா் சங்க மாவட்ட துணைச் செயலா் எ. கலையரசி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...